BREAKING
ஹேக்கர்களால் திருடப்பட்ட 6.6 மில்லியன் டொலர் ஓமானில் மீட்பு ; இலங்கையின் காணாமல் போன பணமா என சந்தேகம் சகோதரி உயிரிழந்து 8 நாட்களில் சகோதரனும் மரணம் – குடும்பம் துயரத்தில் 03 இலட்சம் முதலாம் தர மாணவர்கள் பாதிப்பு… கல்விச் சீர்திருத்த தாமதம் குறித்து கடும் குற்றச்சாட்டு! முதல்வர் விஜய்யின் நெற்றியில் கருப்பு பொட்டு… “அரகஜா” திலகம் என்ன? வைரலாகும் புதிய தோற்றம்! பெண்களின் புகைப்படங்களில் போலி கணக்குகள்… சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் பண மோசடி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை ஹேக்கர்களால் திருடப்பட்ட 6.6 மில்லியன் டொலர் ஓமானில் மீட்பு ; இலங்கையின் காணாமல் போன பணமா என சந்தேகம் சகோதரி உயிரிழந்து 8 நாட்களில் சகோதரனும் மரணம் – குடும்பம் துயரத்தில் 03 இலட்சம் முதலாம் தர மாணவர்கள் பாதிப்பு… கல்விச் சீர்திருத்த தாமதம் குறித்து கடும் குற்றச்சாட்டு! முதல்வர் விஜய்யின் நெற்றியில் கருப்பு பொட்டு… “அரகஜா” திலகம் என்ன? வைரலாகும் புதிய தோற்றம்! பெண்களின் புகைப்படங்களில் போலி கணக்குகள்… சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் பண மோசடி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் பரவும் யானைக்கால் நோய் ; மக்களுக்கு அவசர சுகாதார எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் பரவும் யானைக்கால் நோய் ; மக்களுக்கு அவசர சுகாதார எச்சரிக்கை

இலங்கையில் யானைக்கால் நோய் (Filariasis) மீண்டும் பரவி வருவதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் 68 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

கண்டறியப்பட்ட நோயாளர்களில் 34 பேர் இலங்கையர்கள் என்பதுடன், மற்றைய 34 பேர் இந்தியாவில் இருந்து வேலைக்காக இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பணியாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யானைக்கால் நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் பிரசங்க சேரசிங்க தெரிவித்ததாவது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் தொடர்ந்து பதிவாகி வருவதாகும்.

2030ஆம் ஆண்டுக்குள் யானைக்கால் நோயை முழுமையாக ஒழிப்பதே அரசாங்கத்தின் இலக்காக இருப்பதாகவும், அதற்காக பொதுச் சுகாதார கண்காணிப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக நம்பிக்கை வெளியிடப்பட்டாலும், பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"