2026 ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில், கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தலைமை பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே கூறியுள்ள நிலையில், அதற்கு மாறாகத் தான் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை ஹர்திக் பாண்டியா சமூக வலைதளங்களில் வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். பயிற்சியாளரின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் செயல், அணிக்குள் மிகப்பெரிய குழப்பம் நிலவுவதையும், நிர்வாகத்திற்கும் கேப்டனுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
நடப்புத் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 தோல்விகளுடன் 9-வது இடத்தில் தவிக்கும் மும்பை அணி, ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாளை பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்காக வீரர்கள் தரம்சாலா சென்றுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா அவர்களுடன் செல்லாமல் மும்பையிலேயே தங்கியுள்ளது மேலும் சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது. தற்போது சூர்யகுமார் யாதவ் தற்காலிக கேப்டனாகச் செயல்பட்டு வரும் நிலையில், மோசமான ஃபார்ம் மற்றும் இந்த வீடியோ சர்ச்சை காரணமாக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக