BREAKING
இருமுறை மரண தண்டனை பெற்ற குற்றவாளி வெலிக்கடை சிறையில் அடைப்பு பிரசவத்திற்குப் பின் இளம் தாய் உயிரிழப்பு: நீதி கோரி கணவரின் உருக்கமான வேண்டுகோள் மீன ராசியில் வக்ர சனிபகவான்: ரிஷபம், மிதுனம், துலாம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம் என ஜோதிட கணிப்பு கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடலுக்கு தரும் 10 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் வைரலாகும் ஜேசன் சஞ்சயின் உரை; தந்தை விஜய் குறித்து பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் இருமுறை மரண தண்டனை பெற்ற குற்றவாளி வெலிக்கடை சிறையில் அடைப்பு பிரசவத்திற்குப் பின் இளம் தாய் உயிரிழப்பு: நீதி கோரி கணவரின் உருக்கமான வேண்டுகோள் மீன ராசியில் வக்ர சனிபகவான்: ரிஷபம், மிதுனம், துலாம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம் என ஜோதிட கணிப்பு கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடலுக்கு தரும் 10 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் வைரலாகும் ஜேசன் சஞ்சயின் உரை; தந்தை விஜய் குறித்து பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம்

மரக்கறிகளின் விலை கடும் உயர்வு!

மரக்கறிகளின் விலை கடும் உயர்வு!

இலங்கையில் டீசல் விலை அதிகரிப்பு மற்றும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் மிக வேகமாக உயர்ந்து வருவதாகப் பொருளாதார மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டீசல் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ள நிலையில், தம்புள்ளை உள்ளிட்ட பிரதான பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் சிறு வியாபாரிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி 500 ரூபாவிற்கும், தக்காளி 400 ரூபாவிற்கும், பாகற்காய் 420 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன. சில்லறை சந்தைகளில் போஞ்சி ஒரு கிலோ 650 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், மலையகப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மரக்கறிச் செய்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அறுவடை குறைவடைந்து சந்தைக்கு வரும் மரக்கறிகளின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால், வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் இன்னும் பல மடங்கு அதிகரிக்கக்கூடும் எனப் பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"