பாதாம் பருப்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும் ஒரு உணவாக கருதப்படுகிறது. இதில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
பலரும் பாதாமை இரவு முழுவதும் ஊறவைத்து காலை நேரத்தில் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. இதனால் அதன் ஊட்டச்சத்துக்கள் உடலால் எளிதாக உறிஞ்சப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.
ஆனால் ஊறவைக்காமல் நேரடியாக பாதாமை சாப்பிட்டால் சில உடல் பிரச்சனைகள் ஏற்படலாம் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
1. செரிமான சிரமம்
பாதாம் தோலில் உள்ள சில இயற்கை சேர்மங்கள் காரணமாக, ஊறவைக்காமல் சாப்பிட்டால் ஜீரணிக்க சற்று கடினமாக இருக்கும். இதனால் வயிறு கனத்த உணர்வு, வாயுத் தொல்லை போன்றவை ஏற்படலாம்.
2. ஊட்டச்சத்து உறிஞ்சுதல் குறைவு
பாதாம் தோலில் உள்ள சில இயற்கை அமிலங்கள் உடலில் உள்ள முக்கிய தாதுக்கள் (இரும்பு, கால்சியம், துத்தநாகம்) முழுமையாக உறிஞ்சப்படுவதை குறைக்கலாம். ஊறவைத்தால் இந்த தாக்கம் குறைகிறது.
3. உடல் சூடு அதிகரித்தல்
சில பாரம்பரிய மருத்துவக் கருத்துகளின்படி, ஊறவைக்காத பாதாமை அதிகமாக சாப்பிட்டால் உடலில் சூடு அதிகரித்து முகப்பரு, வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக