அனுராதபுரம் பகுதியில் பிக்கு ஒருவரால் சிறுமி தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நிபந்தனையின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசாங்க நிறுவனங்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான வாய்ப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் சரியாக செயற்பட்டார்களா என்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், தான் எந்த தரப்புக்கும் சார்பாக இல்லை என்றும், முழுமையாக பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனுக்காக மட்டுமே செயற்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தேவையான இடங்களில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க முழுமையான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் எந்தவொரு அழுத்தத்திற்கும் உட்படாமல் பாதுகாக்கப்படுவார்கள் என்றும், சட்ட அமலாக்கத்தில் எந்த தரப்பினரும் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கப்படாது என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக