BREAKING
போர் பதற்றத்தால் உலக விமானப் போக்குவரத்தில் நெருக்கடி! எரிபொருள் விலை 80% உயர்வு 90 ரூபாய் அதிக லாபம் தேடிய வர்த்தகர்... 5 இலட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்! 7 வயது சிறுமி கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு! அமெரிக்காவில் குற்றவாளிக்கு மரண தண்டனை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! அடுத்த சில நாட்களுக்கு பல மாவட்டங்களுக்கு அலர்ட் விஜய்யின் பதவியேற்பு விழா திடீர் ரத்து! மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் போர் பதற்றத்தால் உலக விமானப் போக்குவரத்தில் நெருக்கடி! எரிபொருள் விலை 80% உயர்வு 90 ரூபாய் அதிக லாபம் தேடிய வர்த்தகர்... 5 இலட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்! 7 வயது சிறுமி கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு! அமெரிக்காவில் குற்றவாளிக்கு மரண தண்டனை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! அடுத்த சில நாட்களுக்கு பல மாவட்டங்களுக்கு அலர்ட் விஜய்யின் பதவியேற்பு விழா திடீர் ரத்து! மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர்

அஸ்வெசுமா நிதியில் பெரும் குழப்பம்? திறைசேரியில் மேலும் மில்லியன் ரூபா கொடுப்பனவு விவகாரம் தீவிரம்!

அஸ்வெசுமா நிதியில் பெரும் குழப்பம்? திறைசேரியில் மேலும் மில்லியன் ரூபா கொடுப்பனவு விவகாரம் தீவிரம்!

அஸ்வெசுமா (Aswesuma) நலத்திட்ட பயனாளிகளுக்கு மேலதிகமாக நிதி செலுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘Free Lawyers’ அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, சுமார் 1.7 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இருமுறை அல்லது கூடுதலாக வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தவறான கொடுப்பனவுகளின் மொத்த மதிப்பு சுமார் 500 மில்லியன் ரூபாவிற்கு அருகிலுள்ளதாக கூறப்படுவதுடன், இது அரசின் நிதி முகாமைத்துவத்தில் மிகப்பெரிய அலட்சியத்தையும் குழப்பத்தையும் வெளிக்காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சமீபத்தில் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் காணாமல் போனதாக வெளியான சர்ச்சையுடன் இதையும் ஒப்பிட்டு பல தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து உடனடி நாடாளுமன்ற விசாரணை நடத்த வேண்டும் என ‘Free Lawyers’ அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசியலமைப்பின் 148வது பிரிவின் கீழ் அரச நிதி மேலாண்மைக்கு பொறுப்பான நாடாளுமன்றம் இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் மீதான மக்களின் நம்பிக்கையை இந்த சம்பவம் மேலும் பாதிக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"