Rashmika Mandanna மற்றும் Vijay Deverakonda ஆகியோரின் திருமண வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருமணமாகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இருவரும் தங்கள் திரைப்பட பணிகளில் பிஸியாக இருந்தாலும், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா தனது மனைவி ராஷ்மிகா குறித்து பகிர்ந்த கருத்துகள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில், “ராஷ்மிகா எவ்வளவு முக்கியமானவர்?” என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய், வாழ்க்கையில் பல சவால்கள் வந்தாலும் மனம் தளராமல் தனது பணியை அர்ப்பணிப்புடன் செய்வவர் என்றும், அனைவரிடமும் அன்பும் கருணையும் காட்டும் அற்புதமான மனிதர் என்றும் புகழ்ந்து பேசியுள்ளார்.
மேலும், இந்த போட்டி நிறைந்த சினிமா உலகில் தனது நேர்மையையும் இயல்பையும் காப்பாற்றிக் கொள்ளும் அவரின் முயற்சி தான் மிகவும் பெருமையாக உணர வைக்கிறது என்றும், “அவரை இந்த உலகம் மாற்றக்கூடாது” என்பது தான் தனது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.
விஜயின் இந்த உணர்ச்சிபூர்வமான பேச்சை கேட்ட Rashmika Mandanna கண்கலங்கி ஆனந்தக் கண்ணீர் சிந்தியதாக கூறப்படுகிறது. இந்த தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த தம்பதியின் உறவு, புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதை ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக