BREAKING
வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை

பெண் வைத்தியர்களை குளியலறையில் ரகசியமாக படம் பிடித்த சம்பவம்: இலங்கை - கிரிக்கெட் வீரர்கள் கைது!

பெண் வைத்தியர்களை குளியலறையில் ரகசியமாக படம் பிடித்த சம்பவம்: இலங்கை - கிரிக்கெட் வீரர்கள் கைது!

Narahenpita பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள் குளியலறையில் இருந்தபோது, அவர்களை ரகசியமாக கைபேசியில் காணொளி பதிவு செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் Sri Lanka Under-19 Cricket Team அணியுடன் தொடர்புடைய வீரர்கள் என Sri Lanka Police தெரிவித்துள்ளது.

கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த பெண் வைத்தியர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், குறித்த இளைஞர்கள் பெண்களை மட்டும் அல்லாமல், ஆண்களையும் இவ்வாறு ரகசியமாக பதிவு செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்பட்ட இந்த காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவம் நாட்டில் தனியுரிமை மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"