கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 15-வது லீக் போட்டியில், கொல்கத்தா அணி நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி ஒரு கட்டத்தில் 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இருப்பினும், இளம் வீரர்கள் முகுல் சவுத்ரி மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோரின் அபாரமான அரைசதங்கள் (தலா 54 ரன்கள்) ஆட்டத்தின் போக்கை மாற்றின. குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்ட போது, முகுல் சவுத்ரி காட்டிய அதிரடி லக்னோ அணிக்கு கடைசி பந்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தந்தது.
வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், "முகுல் சவுத்ரி வலைப்பயிற்சியில் காட்டிய திறமையை இக்கட்டான சூழலில் வெளிப்படுத்தியது ஆச்சரியமாக உள்ளது. இந்த வெற்றியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை" என உணர்ச்சிவசப்பட்டார். மேலும், சிறிய நகரங்களில் இருந்து வரும் வீரர்கள் மீது நிர்வாகம் வைக்கும் நம்பிக்கையே இதுபோன்ற அற்புதங்களைச் செய்யத் தூண்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சீனியர் வீரர் முகமது ஷமியின் அனுபவம் மற்றும் ஆயுஷ் பதோனியின் நிதானமான ஆட்டமும் இந்த வெற்றிக்குத் தூணாக அமைந்ததாகப் பாராட்டிய பண்ட், லக்னோ அணி ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்து வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக