பெண் வைத்திய நிபுணர் கைது ; அம்பலமான பல முக்கிய தகவல்கள்

மூன்றாம் தரப்பினர் மூலமாக அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பெண் விசேட வைத்திய நிபுணர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் செய்த மோசடி தொடர்பில் மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
இந்த மோசடியை அந்த வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரே செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிரான முறைப்பாடுகளை கடந்த 2023 இல் விசாரிக்க ஆரம்பித்தது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளின்படி, சம்பந்தப்பட்ட வைத்திய நிபுணர் நரம்பியல் அறுவை சிகிச்சைக்குத் தேவையான EVD மற்றும் VP Shunt உபகரணங்களை மூன்றாம் தரப்பினர் மூலம் சந்தை விலையை விட அதிக விலைக்கு மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த மோசடியில் ஈடுபட்ட உபகரணங்களின் சந்தை பெறுமதி 30,000 – 60,000 ரூபாவாக என்பதோடு, அதனை அவர்கள் 120,000 ரூபா முதல் 250,000 ரூபா வரையில் விற்பனை செய்ததாக தெரியவந்துள்ளது.
இந்த மோசடி ஆரம்பத்தில் வைத்தியரின் கணவரால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டது என்பதும், அவரது கணவர் இறந்த பிறகு, தொடர்புடைய பரிவர்த்தனைகள் சொந்த பெயரிலேயே மேற்கொள்ளப்பட்டதும் இப்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, தற்போது அவருடன் விளக்கமறியலில் உள்ள இரண்டு நபர்களின் உதவியுடன் இந்த அறுவை சிகிச்சை உபகரணங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜயவர்தனபுர வைத்தியசாலை இந்த உபகரணங்களை வருடாந்திர மதிப்பீடுகள் மூலம் பெற முடிந்தாலும், சம்பந்தப்பட்ட வைத்தியர் அந்த நடைமுறையை மேற்கொள்ளாமலேயே இந்த மோசடியை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த பெண் வைத்தியர் நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு (தற்போது விளக்கமறியலில் உள்ள இருவரில் ஒருவர்) ஒரு தொலைபேசி எண்ணை வழங்கி, அவர் மூலம் இந்த உபகரணங்களை விற்றதாகக் கூறப்படுகிறது.
விற்பனையின் ஊடாக பெறப்பட்ட பணம், வைத்தியர் மற்றும் சம்பந்தப்பட்ட நபரின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளில் வௌியாகியுள்ளன.
நோயாளிகள் வேறு நிறுவனங்களில் இருந்து இந்த உபகரணங்களை (Prescription) வாங்குவதைத் தடுக்க, அவர்களுக்கு உரிய மருந்துச் சீட்டை வழங்காமல் இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைத்தியரின் கீழ் அறுவை சிகிச்சை செய்த 75 நோயாளிகளின் வாக்குமூலங்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏற்கனவே பதிவு செய்துள்ளது. மேலும் அவர்கள் மொத்தம் சுமார் 300 நோயாளிகளின் வாக்குமூலங்களைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், 75 நோயாளிகள் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்த தகவல்களின் அடிப்படையில், வைத்தியர் உட்பட மூவரும் சுமார் 30 மில்லியன் ரூபா வரையில் ஈட்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.