கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (11.03.2026) மதியம் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வருகை தந்த மூன்று வெளிநாட்டுப் பயணிகள், சுமார் 13.6 மில்லியன் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 22, 26 மற்றும் 49 வயதுடைய மலேசியத் தொழிலதிபர்களான இவர்கள், அந்நாட்டில் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்களை நடத்தி வருபவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் கொண்டு வந்த 4 பொதிகளுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 454 கையடக்கத் தொலைபேசிகளைச் சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினர் இணைந்து கைப்பற்றியுள்ளனர். தற்போது சந்தேகநபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு, விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக