மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, முனைக்காடு பகுதியில், மூன்று பெண்கள் மீது காட்டு யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்து இருவர் காயமடைந்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (27) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 76 வயதுடைய பெண் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த இருவர் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக