மாத்தளை – இரத்தோட்டை பகுதியில், 74 வயதுடைய ஒரு பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் விழுந்து உயிரிழந்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை (27) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் இரத்தோட்டை, கைகாவல பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளது. சம்பவ தொடர்பாக இரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக