மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மட்டு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளன.
முக்கிய போக்குவரத்துப் பாதைகளில் நீர் தேங்கி போக்குவரத்து சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள், இயல்பு வாழ்க்கை மற்றும் வியாபார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதனால் அரசு அதிகாரிகள் மற்றும் அவசர சேவை குழுக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் அவசர தேவையின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக