களுத்துறை பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலை மாணவர் குழுக்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டதில் 7 மாணவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நேற்று (5) இடம்பெற்றுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மோதல் ஏற்பட்டது க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக, பாடசாலைகளுக்கான விசேட வகுப்பில் கலந்துகொண்ட இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையில். காயமடைந்த 7 மாணவர்கள் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சம்பவம் தொடர்பாக அளுத்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக