நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம், அதில் தட்டை பயிர் (காராமணி) முக்கிய பங்கு வகிக்கிறது. இது செரிமானத்தையும் குடல் இயக்கத்தையும் சீராக வைத்துக் கொள்கிறது, உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. தட்டைப்பயிரில் வைட்டமின் சி, ஏ, பி, போலிக் ஆசிட், இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், தயாமின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் காரணமாக இதயம் ஆரோக்கியமாக செயல்படும், ரத்த கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்கும், சர்க்கரை நோயாளிகளுக்குத் தக்கது. தொடர்ந்து உணவில் சேர்த்தால் முடி ஆரோக்கியமாகவும், முடி உதிர்வு பிரச்சனைகள் குறையும்; சருமம் பளபளப்பாகும். தட்டைப் பயிரை அரைத்து குழம்பு, முளைகட்டிய விதமாக அல்லது அடை செய்து சாப்பிடுவதன் மூலம் எளிதாக ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
செய்திகள்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக