இலங்கையின் தென்னை ஏற்றுமதித்துறை, கடந்த ஆண்டில் 1.2 பில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் கூறியதாவது, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 43 சதவீத வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறது. தேங்காய்ப் பால், தேங்காய் கிரீம் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றிற்கு சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள அதிகமான கேள்வி, இந்த வருமான வளர்ச்சிக்கு காரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகள்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக