நாட்டின் டிஜிட்டல் நிர்வாக இயக்கத்தில் முக்கிய மைல்கல்லாக, GovPAY டிஜிட்டல் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தும் நடவடிக்கை அதிகாரபூர்வமாக கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி நிறைவு பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாகன சாரதிகள் எந்த இடத்திலிருந்தும் மின்னணு முறையில் அபராதங்களை செலுத்தி, தாமதமின்றி தங்கள் ஓட்டுநர் உரிமைகளை மீட்டெடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது இந்த தளம் 86,000 க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை செயல்படுத்தி, ரூ. 115 மில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் வசூல்கள் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் முழுமையாக நடைமுறைக்கு வந்த இந்த திட்டம், போக்குவரத்து மேலாண்மையில் துரிதமான, வெளிப்படையான மற்றும் நவீன முறைமையை ஏற்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
செய்திகள்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக