BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அதிகாலை வாள்வெட்டு தாக்குதல் கணவர் படுகாயம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அதிகாலை வாள்வெட்டு தாக்குதல் கணவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (04) அதிகாலை மூன்று பேர் உள்நுழைந்து பயங்கரமான வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த வீட்டில் அந்த நேரத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் மட்டுமே இருந்த நிலையில், கணவரை இலக்காகக் கொண்டு சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின்போது தம்பதிகள் கூச்சலிட்டபோதும், அச்சம் காரணமாக அயலவர்கள் எவரும் உதவிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் முகமூடி அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முயன்ற வேளையில் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட போதிலும், பொலிஸார் மதிய நேரத்திலேயே விசாரணைகளை ஆரம்பித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"