அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள், வியட்நாமில் இரண்டாவது படையெடுப்பு மேற்கொள்ளத் தங்களைத் தயாரித்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் கசிந்த வியட்நாம் இராணுவக் ஆவணங்களில் வெளிப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களில், அமெரிக்கா பிராந்தியத்தில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஊக்குவிப்பதாக வியட்நாம் குறித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வியட்நாம் மறுத்தவுடன், அமெரிக்கா Tomahawk ஏவுகணைகள், ட்ரோன்கள், கடற்படை தாக்குதல் மற்றும் ஹெலிகொப்டர் ஊடுருவல் உள்ளிட்ட விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே, படையெடுப்பு தோல்வியடைந்தால், உயிரியல், இரசாயன மற்றும் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும் என்றும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வியட்நாம் போர் முடிந்த பிறகும், அமெரிக்கா-வியட்நாம் உறவுகள் படிப்படியாக நெருக்கமடைந்துள்ள நிலையில், இதுபோன்ற ஆவணங்கள் ரகசியமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. கிரீன்லாந்து, கனடாவைத் தொடர்ந்து ஆசிய நாடொன்றை இலக்கு வைத்துள்ளதாகவும், அமெரிக்காவின் கடற்படை மற்றும் கூட்டாளிகள் வியட்நாமின் பரந்த கடல்கள் மற்றும் கடற்கரை நிலப்பரப்புகளை பயன்படுத்தி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்றும் ஆவணங்கள் தெரிவித்துள்ளன. வியட்நாம் அதற்குத் தயாராகி தனது போர் திட்டங்களை திருத்தி அமைப்பதை வலியுறுத்தி இந்த ஆவணம் நிறைவு அடைகிறது.
செய்திகள்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக