அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் தகாத உறவு காரணமாக யுவதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின் படி, சம்பவத்தன்று குறித்த யுவதி, தன்னுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்தத் தகராறு தீவிரமடைந்த நிலையில், சந்தேக நபர் யுவதியை கொடூரமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலானை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக