மார்ச் முதல் ஜூலை வரையிலான ஐந்து மாதங்களில், சுமார் 1.95 இலட்சம் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, நாளொன்றுக்கு சராசரியாக 1,275 முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சராசரியாக 68 விநாடிகளுக்கு ஒரு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிடைத்துள்ள தகவல்களின்படி, அதிகபட்சமாக Instagram கணக்குகளுக்கு சுமார் ஒரு இலட்சம் முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல்,
என கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக தேர்வு முறைகேடுகளை கண்டித்து மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சமூக வலைதளக் கணக்குகளை முடக்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணக்குகள் முடக்கப்படும் போது, அவற்றில் பதிவிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்களும் அணுக முடியாத நிலைக்கு செல்லக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வேகமாகப் பரவும் சூழலில், இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் இணையத்தில் பரவும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக