கொழும்பு 02, கொம்பனி வீதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்துக்குச் சொந்தமான பெறுமதியான நகைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆலயத்தின் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் பிரதம குருவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன ஆலய நகைகளை அடகு வைத்து கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி கொட்டாஞ்சேனை புதிய செட்டியார் வீதியில் காணியொன்றை கொள்வனவு செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காணாமல் போன நகைகளை மீட்பதுடன், குறித்த பணத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக