பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 48 வயதுடைய ஷிரான் பஸிக், 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யப்படவுள்ளார்.
டுபாயில் கைது செய்யப்பட்ட அவர், கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக CCID அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
டுபாயில் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பாகவும் அவர் விசாரணையாளர்களிடம் தகவல்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரானுடனான மோதல் தீவிரமடைந்த காலத்தில் டுபாய் காவல்துறையினர் தம்மை வழிமறித்து விசாரணை செய்ததாகவும், தனது அலைபேசியில் ஈரானிய தாக்குதல்கள் தொடர்பான படங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஷிரான் பஸிக்கிற்கு எதிராக முன்வைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் CCID அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக