ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கிராமமொன்றில், நள்ளிரவில் கணவன் எதிர்பாராத விதமாக வீடு திரும்பியபோது நடந்த சம்பவம் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியின் நடத்தை குறித்து ஏற்கனவே சில வதந்திகள் இருந்த நிலையில், இரவு நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் சத்தம் கேட்டதால் சந்தேகமடைந்த கணவன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பலா மரத்தின் மீது ஒருவர் பதுங்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் உறவினர்கள் உதவியுடன் அந்த நபரை கீழே இறக்கி விசாரித்தபோது, அவர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், வீட்டின் உரிமையாளரின் மனைவியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கணவன் தனது இரு பிள்ளைகளையும் தானே கவனித்துக்கொள்வதாகவும், மனைவியும் குறித்த நபரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக