கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா (Reecha Organic Farm) வளாகத்தில் நடைபெற்ற “அட்சய பாத்திரம்” உணவுத் திருவிழாவின் போது பரபரப்பான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுத் திருவிழாவிற்கு அதிகளவான மக்கள் வருகை தந்த நிலையில், கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் மற்றும் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நிகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்வின்போது ஏற்பட்ட எதிர்பாராத சிரமங்களுக்கு மன்னிப்பு கோரியுள்ள ஏற்பாட்டுத் தரப்பு, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் மீது சிலர் குப்பைகளை கொட்டியதுடன், ஊழியர்களை துன்புறுத்தியதாகவும் கவலை தெரிவித்துள்ளது.
மேலும், நிகழ்வை சீர்குலைக்கும் நோக்கில் சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டதாகவும் நிறுவனத் தலைவர் பாஸ்கரன் கந்தையா தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நிகழ்வில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நிறுவனத் தரப்பிலிருந்து விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணி தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக