BREAKING
மகனுடன் கடற்கரையில் அசத்தல் நடனம் ஆடிய பிரபுதேவா சூப்பர் சிங்கர் ஹரிப்ரியாவை ஞாபகம் இருக்கா? வைரலாகும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் இருக்கைகள் தொடர்பாக அவசர பரிசோதனை – அமெரிக்க FAA எச்சரிக்கை இலங்கை சுங்க சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கல்; ஒக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை பதவிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையை விட்டு பிரியும் சீனத் தூதுவர் சஜித் பிரேமதாஸவை சந்திப்பு மகனுடன் கடற்கரையில் அசத்தல் நடனம் ஆடிய பிரபுதேவா சூப்பர் சிங்கர் ஹரிப்ரியாவை ஞாபகம் இருக்கா? வைரலாகும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் இருக்கைகள் தொடர்பாக அவசர பரிசோதனை – அமெரிக்க FAA எச்சரிக்கை இலங்கை சுங்க சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கல்; ஒக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை பதவிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையை விட்டு பிரியும் சீனத் தூதுவர் சஜித் பிரேமதாஸவை சந்திப்பு

செம்மணி புதைகுழி விவகாரத்தில் பல தரப்பினரின் கட்டுப்பாடு இருந்ததாக நீதியமைச்சர் ஹர்ச நாணயக்கார தெரிவிப்பு

செம்மணி புதைகுழி விவகாரத்தில் பல தரப்பினரின் கட்டுப்பாடு இருந்ததாக நீதியமைச்சர் ஹர்ச நாணயக்கார தெரிவிப்பு

செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் தொடரும் நிலையில், அந்தப் பகுதி கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்ததால், குற்றவாளிகளை அடையாளம் காண்பது சிக்கலான பணியாக இருக்கும் என நீதியமைச்சர் ஹர்ச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வெளியிட்ட தகவல்களின்படி, செம்மணி பகுதியில் இதுவரை 450-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி பல்வேறு காலகட்டங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பு, இந்திய அமைதிப்படை, துணை இராணுவக் குழுக்கள் மற்றும் இலங்கை இராணுவம் ஆகிய தரப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மரணத்திற்கான காரணங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் தடயவியல் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இயற்கை மரணமா அல்லது வன்முறை காரணமான மரணமா என்பதை அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணைகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காணும் நிலைக்கு இதுவரை விசாரணைகள் முன்னேறவில்லை என்றும் அமைச்சர் ஹர்ச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் நோக்கில் தடயவியல் மற்றும் சட்டரீதியான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"