BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

"மன்னாரைச் சுரண்டாதே!" - காற்றாலைத் திட்டத்திற்கு முன் நிலங்களை விடுவிக்க ஜனாதிபதிக்கு சிவகரன் அவசர கடிதம்.

"மன்னாரைச் சுரண்டாதே!" - காற்றாலைத் திட்டத்திற்கு முன் நிலங்களை விடுவிக்க ஜனாதிபதிக்கு சிவகரன் அவசர கடிதம்.

மன்னார் தீவுப் பகுதியில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிம மண் அகழ்வுத் திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகக் கூறி, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ். சிவகரன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஆட்சியாளர்கள் தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பது குறித்துக் கடும் கவலையை வெளியிட்டுள்ளார்.

 காற்றாலை மற்றும் மணல் அகழ்வு வேண்டாம் என்ற மன்னார் மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, தற்போது 14 புதிய காற்றாலைகளுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 மணல் அகழ்வு முற்றாக நிறுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட போதிலும், அதனுடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்கள் தொடர்ந்தும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

 மன்னாரின் இயற்கை வளங்கள் சுரண்டப்படும் நிலையில், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணங்கள் கூட இன்னும் வழங்கப்படவில்லை என சிவகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

 மன்னார் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சூழலியல் ரீதியாக மென்மையான பகுதி என்பதால், அதன் இயல்பைக் கெடுக்காமல் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

"மன்னாரின் வளத்தைச் சுரண்டி, மக்களின் வாழ்வியலைக் கெடுப்பது நியாயமா?" என அவர் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்னதாக மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"