BREAKING
முதல்வர் விஜய் பிறந்தநாளுக்கு த்ரிஷா வாழ்த்து தெரிவிக்காதது குறித்து இணையத்தில் பரபரப்பு கேள்வி திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வு திட்டம்: மக்கள் அணுகலை தடுக்கும் நடவடிக்கை என பாஜக குற்றச்சாட்டு காலையில் சீக்கிரம் எழுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து முக்கிய தகவல் மொனராகலையில் கிங் கங்கையில் சந்தேகத்திற்கிடமான ஆண் சடலம் மீட்பு – அடையாளம் தெரியாத நிலை காலி ஜின் ஆற்றில் கை–கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை முதல்வர் விஜய் பிறந்தநாளுக்கு த்ரிஷா வாழ்த்து தெரிவிக்காதது குறித்து இணையத்தில் பரபரப்பு கேள்வி திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வு திட்டம்: மக்கள் அணுகலை தடுக்கும் நடவடிக்கை என பாஜக குற்றச்சாட்டு காலையில் சீக்கிரம் எழுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து முக்கிய தகவல் மொனராகலையில் கிங் கங்கையில் சந்தேகத்திற்கிடமான ஆண் சடலம் மீட்பு – அடையாளம் தெரியாத நிலை காலி ஜின் ஆற்றில் கை–கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

பொசன் போயாவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூட உத்தரவு

பொசன் போயாவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூட உத்தரவு

2026 ஆம் ஆண்டு பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு மதுவரி திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்னவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 29 ஆம் திகதி அனுசரிக்கப்படவுள்ள பொசன் போயா தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் ஜூன் 28 ஆம் திகதி இரவு முதல் ஜூன் 30 ஆம் திகதி காலை வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அநுராதபுரத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள தேசிய பொசன் வார நிகழ்வுகளை முன்னிட்டு, ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை குறிப்பிட்ட சில பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மதுபானசாலைகள் ஜூன் 25 ஆம் திகதி இரவு முதல் ஜூலை 3 ஆம் திகதி காலை வரை செயல்படாமல் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பொசன் பண்டிகை காலத்தில் மதச்சார்பான நிகழ்வுகள் மற்றும் பக்தி வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"