BREAKING
20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய 20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி அணிவது ஜூன் முதல் கட்டாயம்: விதிமீறலுக்கு நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி அணிவது ஜூன் முதல் கட்டாயம்: விதிமீறலுக்கு நடவடிக்கை

வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் ஆசனப் பட்டி அணிவதை கட்டாயமாக்கும் சட்டம் எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி முதல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு குறித்த தேசிய சபை அறிவித்துள்ளது.

வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் உள்ள பயணிகள் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாகும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவிக்கையில், வாகனத்தின் முன்பக்க ஆசனங்களில் அமர்ந்திருப்பவர்கள் மட்டுமின்றி, பின்பக்க ஆசனங்களில் பயணிக்கும் நபர்களும் கட்டாயமாக ஆசனப் பட்டி அணிய வேண்டும் என்ற விதி நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக கூறினார்.

இந்த புதிய சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தது. அந்த சலுகைக் காலம் ஜூன் 19ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து எந்தவித விதிவிலக்குமின்றி சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜூன் 20ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் தொடர்புடைய வீதி போக்குவரத்து நடவடிக்கைகளில் ஆசனப் பட்டி அணியாத பயணிகள் மற்றும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும், பயணத்தின் போது அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டி அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வீதி பாதுகாப்பு குறித்த தேசிய சபை கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"