சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் இந்த அதிரடித் தீர்மானத்தை எடுத்துள்ளது.
தடை அமுல்: உணவகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் அன்னதான மடங்களில் லஞ்ச்சீற் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
கடும் தண்டனை: இந்த உத்தரவை மீறி லஞ்ச்சீற் பயன்படுத்தும் உணவகங்களின் வியாபார உரிமம் (Business License) இடைநிறுத்தப்படும் என நகரசபை எச்சரித்துள்ளது.
கால அவகாசம்: மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்காக எதிர்வரும் ஜனவரி 15-ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நடைமுறை: ஜனவரி 16-ஆம் திகதி முதல் நகரசபை அதிகாரிகள் அதிரடிச் சோதனைகளை முன்னெடுத்து, விதிகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக