யாழ்ப்பாணம் Jaffna பகுதியில் உள்ள Chemmani Mass Graves மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற அகழ்வுப் பணிகளில் மேலும் பல மனித என்புக்கூட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வின் 9ஆம் நாள் பணிகள் புதன்கிழமை நடைபெற்றபோது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பகுதியில் இருந்து மூன்று என்புக்கூட்டுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, மேலும் ஒரு என்புக்கூடு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதன் சில பகுதிகள் மயானத்தின் எரிமேடை கட்டுமானத்தின் கீழ் அமைந்துள்ளதால், அவற்றை பாதுகாப்பாக அகழ்ந்து எடுக்கும் பணிகள் அடுத்த கட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அகழ்வுப் பணிகளின் மூலம் இதுவரை மொத்தமாக 256 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 252 என்புக்கூட்டுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பல ஆண்டுகளாக சர்ச்சையிலும் மனித உரிமை கவனத்திலும் இருந்து வரும் செம்மணி மனித புதைகுழி விவகாரம், மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதுடன், உண்மை மற்றும் நீதிக்கான கோரிக்கைகளும் மீண்டும் வலுப்பெற்று வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக