யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபை, கழிவுப் பொருட்களை பயன்படுத்தி இயற்கை உர உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ஆரம்பத்தில் முன்னாள் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசனின் தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. பிரதேசத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை மறுசுழற்சி செய்து இயற்கை உரமாக மாற்றும் இந்த முயற்சி, தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த திட்டத்தின் மூலம் பெருமளவு இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, விவசாய தேவைக்காக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சுமார் 3 இலட்சம் கிலோ இயற்கை உரம் வழங்கும் திறன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் முதல்கட்டமாக 50,000 கிலோ உரம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை மற்றும் நிலையான விவசாய வளர்ச்சிக்கு உதவும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. முன்னாள் தவிசாளர் ஜெபநேசனின் ஆரம்ப முயற்சி தற்போது பலனளித்து வருவது உள்ளூராட்சி நிர்வாகத்தில் ஒரு சாதனையாக மதிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக