Ranil Wickremesinghe ஜனாதிபதியாக இருந்த காலத்தில், Easter Attack Sri Lanka தொடர்பான விசாரணை நடைமுறைகள் குறித்து புதிய சர்ச்சைகள் உருவாகியுள்ளன. Suresh Salley மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் நியமனத்தில் முறைகேடுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸர்லாந்தில் இருந்து இயங்கும் ஒரு இணையதளம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், விசாரணை ஆணைக்குழுவின் தலைவரைத் தேர்வு செய்வதில் சலேவின் தாக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், குறுகிய காலத்திலேயே விசாரணை முடிக்கப்பட்டு, சலேக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இல்லை என அறிக்கை வெளியிடப்பட்டதும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதனுடன், சலேவுக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பு, தொடர்புடைய அதிகாரிகளுக்கிடையேயான நெருங்கிய உறவுகள் போன்ற விடயங்களும் அரசியல் வட்டாரங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகள் மற்றும் உண்மைகள் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக