குஜராத்தை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிய லக்னோ

அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மேன் 22) நடைபெற்ற 18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 64ஆவது லீக் ஆட்டத்தில், ப்ளே-ஓப் வாய்ப்பு இழந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ப்ளே-ஓஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்ற குஜராத் டைட்டன்ஸை எதிர்கொண்டு அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி தக்கரா அதிரடியுடன் ஆடியது. 20 ஓவர்கள் நிறைவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, மொத்தமாக 235 ஓட்டங்களை குவித்தது.
236 ஓட்டங்களைக் கோலாகக் கொண்டு களமிறங்கிய குஜராத் அணி, லக்னோவின் துல்லியமான பந்துவீச்சுக்கு கட்டுப்பட்டு, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 202 ஓட்டங்களையே பெற்றுத் தோல்வியடைந்தது.
இப்போட்டி, புள்ளிவிபரங்களிலோ அல்லது பிளே-ஓஃப் வாய்ப்புகளிலோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத போதிலும், லக்னோ அணி வீரர்கள் தங்கள் திறமைகளை நிரூபித்தவாறு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. குஜராத் அணிக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையக்கூடும், பிளே-ஓஃப் சுற்றுக்கு முன் ஏற்படும் தோல்விகள் அணியின் ஆற்றலுக்கு சவாலாக இருப்பதற்கான முன்னோட்டமாகும்.
இதன் மூலம், 2025 ஐ.பி.எல். தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்து, பிளே-ஓஃப் கட்டத்திற்கு அணிகள் தயாராகி வருகின்றன.