ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் மீதமுள்ள 17 போட்டிகள் மே 17-ஆம் திகதி முதல் துவங்குவதாக, பி.சி.சி.ஐ இன்று (மே 12) அறிவித்துள்ளது.
இந்த போட்டிகள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டில்லி, லக்னோ, மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களில் நடைபெறவுள்ளன.
ஐ.பி.எல் – இல் இடையிடையாக நடந்த இந்தியா – பாகிஸ்தான் தீவிர போரின் காரணமாக, போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
தர்மசாலாவில் நடைபெற இருந்த பஞ்சாப் கிங்ஸ் – தில்லி கேபிடல்ஸ் அணிகளுக்கான போட்டி, பாதுகாப்பு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் திகதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.