கொழும்பில் களமிறக்கப்படும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படை

எதிர்வரும் பண்டிகை காலத்தில் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
6,000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்,பொலிஸார் சிவில் உடையில் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.இலங்கை இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படை (STF) பாதுகாப்பு பணியில் சேர்ப்பிக்கப்படவுள்ளனர்.புலனாய்வு அதிகாரிகள் முக்கியமான தகவல்களைச் சேகரிக்கச் செயல்படுவார்கள்.வீதித் தடுப்புப் பணிகளில் இராணுவம் கவனம் செலுத்தும்
கொழும்பின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது!