சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து யாழில் முன்ணணியினர் ஆர்ப்பாட்டம் !
![சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து யாழில் முன்ணணியினர் ஆர்ப்பாட்டம் !](https://likedtamil.lk/wp-content/uploads/2023/03/Screenshot_2023_0318_142902.png)
சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து யாழில் முன்ணணியினர் ஆர்ப்பாட்டம் !
சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக சவேந்திர சில்வா இன்று யாழுக்கு விஜயம் செய்கின்றார்.
இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நல்லூர்பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகர் மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்