ஒருபுறம் சமாதான முகம், மறுபுறம் தமிழ்த் தேசத்தில் இனச்சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரல் ரணிலின் செயல் இதுதான் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி
சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபுறம் சமாதான முகத்தை சர்வதேச சமூகத்திற்குக் காட்டிக் கொண்டு மறுபுறம் தமிழ்த் தேசத்தில் இனச் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரலை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.
வடக்கு கிழக்குக் கடலில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்க முற்படுகின்றமை மற்றும் குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவினை மீறி தொல்பொருள் இடத்தில் புத்த விகாரை அமைக்கப்பட்டமை மற்றும் மட்டக்களப்பு மயிலத்த மடுவில் மாடு வளர்ப்பில் ஈடுபடும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கால் நடைகள் அழிப்பு என்பனவும் என்பனவும் அண்மைய உதாரணங்களாகும்.
மாதுறு ஓயா வலதுகரை அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதன் கீழ் பெரும்பான்மை இனத்தவர்களை மட்டக்களப்பு மாவட்த்தின் மயிலத்த மடு மற்றும் மாதவனை ஆகிய இடங்களில் குடியேற்றும் நோக்குடனேயே இந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கைக்கு உதவும் நாடுகள் மற்றும் சர்வதேச நிதி வழங்குனர்கள் இலங்கை அரசின் இவ்வாறான இனவாத நடவடிக்கைகளுக்கு உதவக்கூடாது. நிபந்தனையற்ற உதவிகளை இலங்கைக்கு ஒருபோதும் வழங்கக்கூடாது.
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்