சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் பாலியல் வன்கொடுமை; சந்தேக நபர் அதிரடியாக கைது !

அம்பலந்தோட்டை பகுதிக்குச் சுற்றுலா சென்ற 19 வயதுடைய எகிப்து பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பலந்தோட்டை பேருந்து நிலையம் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் அம்பலந்தோட்டை, மோதரவில பகுதியைச் சேர்ந்த 43 வயது நபரே கைது செய்யப்பட்டதாக அம்பலந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில் வெளிநாட்டு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.