தைப்பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்வு”
அருள்மிகு ஸ்ரீமஹா சந்திரசேகரப்பிள்ளையார் திருவருளுடன்,தமிழ்நாடுமேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி அவர்களின் அருளாசியுடன்
“தைப்பொங்கல் பொதிகள் வழங்கும் நிகழ்வு”
நிகழும் சுபகிருது வருஷம் தைத்திங்கள் முதலாம் நாள் நிகழவுள்ள தமிழர்தம் திருநாள் தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் “அனைவருக்கும் பொங்கல்”
என்ற வகையில்,நல்லூர்ஸ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய கலாச்சாரமண்டபத்தினரின் ஏற்பாட்டில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான பொங்கல்பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் குறித்த மண்டபத்தில் நடைபெற்றது.
அமரர்கள் வல்லிபுரம்&நல்லம்மா அவர்கள் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்புடன் நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் ஆலய அறங்காவற்குழு செயலாளர் திரு.நடேசபிள்ளை கஜேந்திரகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ.முத்து.ஸ்ரீநீவாசககுருக்கள் ஆசியுரை வழங்கியிருந்தார்
ஆலய அறங்காவற்குழு தலைவரும் வடமாகாணசபை அவைத்தலைவருமான திரு.சீ.வீ.கே.சிவஞானம்,ஆலய அறங்காவற்குழு உபசெயலாளர் திரு.இ.விக்கினேஸ்வரன்,நல்லூர்வடக்கு சனசமூக நிலைய தலைவர் திரு.பூ.லிங்கநாதன் ஆகியோருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அடியவர்கள் திரு.வல்லிபுரம் ரவி,திரு.க.சதீஸ் ஆகியோருடன் அறங்காவலர்கள்,பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.