நாட்டையே உலுக்கிய ஓங்கோல் ஹைவே கொலைவழக்கில் அதிரடி தீர்ப்பு..
நான்கு லாரிகள் மாயம், 13 கொடூர கொலைகள் என்று நாட்டையே உலுக்கிய ஓங்கோல் ஹைவே கொலைவழக்கில் அதிரடி தீர்ப்பு..
2007 ஆம் ஆண்டு சென்னை -கொல்கத்தா நான்குவழி சாலையில் சென்ற கனரக வாகனங்கள் டிரைவர் க்ளீனர்களுடன் மாயமாகின, காரணங்கள் எதுவுமின்றி லாரியுடன் காணாமல் போயின.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2008 அக்டோபர் மாதத்தில் துர்காபூரில் இருந்து கல்பாக்கத்திற்கு இரும்பு பொருட்களை ஏற்றிக் வந்த லாரியும் டிரைவர் ராமசேகர் மற்றும் கிளீனர் பெருமாள் சுப்பிரமணி ஆகியோர் சென்னை -கொல்கத்தா நான்குவழி சாலையில் காணாமல் போகிறார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த லாரி உரிமையாளர் வீரப்பன் குப்புசாமி லாரி புறப்பட்ட நேரம் டோல்கேட்டுகளை கடந்த நேரம் போன்றவற்றை கணக்கிட்டு லாரிகள் காணாமல் போனது ஆந்திராவின் நெல்லூருக்கும் விஜயவாடாவிற்கும் இடைப்பட்ட ஓங்கோல் பகுதியாக இருக்கலாம் என கணித்து 17.10.2008ல்
ஓங்கோல் நகர காவல் நிலையத்தில் வழங்குபதிவு செய்கிறார்.
இந்த வழக்கை எஸ்.ஐ M.லட்சுமணன் விசாரித்தார். பின்பு பயிற்சி DSP AR தாமோதர் விசாரிக்க ஆரம்பித்தார். ஒரு வழக்கை சிபிஐ விசாரிக்க ஆரம்பிக்கிறது.
எந்தவித முகாந்திரமும், தடயங்களும், காரணங்களுக்கு புரியாமல் விசாரணை கடுமையான முயற்சிக்கு பின்னும் முன்னேற்றமடையாமல் இருந்தது இந்த சூழ்நிலையில் காணாமல் போன லாரி ஒன்றின் உதிரி பாகத்தை குண்டூர் பழய மார்க்கட்டில் கண்டுபிடிக்கிறார்கள்.
இதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த இரும்பு வியாபாரிகளை கண்காணிக்க தொடங்குகிறது காவல்துறை அப்துல் சமீது என்னும் முன்னா பாய் மீது சந்தேகம் வருகிறது அவனை கைது செய்ய காவல்துறை முயன்றபோது கைதாவதை தவிர்க்க 20 வெவேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி காவல்துறையை குழப்பிக்கொண்டிருந்தான்.
காவல்துறை அவனை பற்றி தீவிர விசாரணையில் இறங்கியபோது அவன் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயன்றுவருவதாகவும் பெங்களூரில் ஒரு விவிஐபி பாதுகாப்பில் இருப்பதாகவும் கண்டுபிடிக்கிறார்கள்.
தீவிர கண்கணிப்பிற்கு பின் பெங்களூரில் முன்னாள் எம்.எல்.ஏவின் பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த அப்துல் சமீது எனும் முன்னா பாயை விரட்டி பிடித்து கைதுசெய்கிறது காவல்துறை. அதன் பின் உண்மைகள் ஒவொன்றாக வெளிவருகின்றன
சின்னசின்ன குற்றவழக்குகளில் சிக்கி சிறை சென்று வந்த முன்னா பாய் எனும் பழய இரும்பு வியாபாரி பெருசாக எதாவது செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் அதற்கு என்னசெய்யலாம் என்று தனது சகாக்களுடன் ஓங்கோல் பஸ்டான்ட் அருகிலிருக்கும் டீகடையில் அமர்ந்து ஆலோசனை நடத்தியிருக்கிறான் அப்போதுதான் ஹைவே லாரிகளை கொள்ளையடித்து செட்டிலாகும் யோசனை உருவாகி இருக்கிறது லாரியை உடைத்து ஸ்கிரப்பிற்கு போடலாம் இரும்பை வெளிமானிலங்களுக்கு விற்கலாம் என திட்டமிடுகிறான்.
இவர்கள் இரு குழுக்களாக பிரிந்து போலீஸ் வேடம்போட்டு ஹைவேயில் நின்று கொண்டு இரும்பு லோடு ஏற்றிவரும் லாரிகளை மறித்து டாக்குமண்ட் எடுத்துவர சொல்வது டிரைவரும் க்ளீனரும் பக்கத்தில் வந்ததும் கழுத்தில் கயிற்றை இறுக்கி துடிக்க துடிக்க கொடூரமாக கொன்று சாக்கு முட்டையில் கட்டி அருகிலிருக்கும் காட்டிற்குள் புதைத்துவிட்டு வண்டியை தன்னுடைய குடோனுக்கு ஓட்டி சென்று பிரித்து விற்று வந்திருக்கிறது.
இந்த கும்பல் மொத்தம் நான்கு லாரிகள் 13 கொலைகள் செய்திருக்கிறது, இந்த வழக்கில் தொடர்புடைய 20 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 13 ஆண்டுகள் நடந்த விசாரணையில் 24.05.2021 அன்று ஓங்கோல் மாவட்ட நீதிபதி மனோகர் ரெட்டி அதிரடி தீர்ப்பை வழங்கினார்.
இந்த குற்றவளாகில் சம்மந்தப்பட்ட 12 பேருக்கு தூக்கு அதில் முன்னா உட்பட மூன்று பேருக்கு இரண்டுமுறை தூக்கு 07 பேருக்கு ஆயுள் தண்டனை என வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறார். நாட்டிலேயே ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை என்பது இது தான் முதல் முறை.
அரசு தரப்பு வழக்கறிஞர் சிவராமக்ரிஷ்ண பிரசாத் திறம்பட செயல்பட்டு பாராட்டுகளை பெற்றார்.
நாட்டிலுள்ள அணைத்து மொழி ஊடகங்களிலும் இந்த தீர்ப்பை பற்றிய செய்திகள் முக்கியத்தும் குடுத்து வெளியிட்டது.