போதை பாதையை மாற்றி எமது இளைஞர்களை பாதுகாப்போம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிதலைவி வாசுகி சுதாகர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவியும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும் ஆசிரியருமாகிய திருமதி வாசுகி சுதாகரன் இன்று போதையினால் வடகிழக்கு பிரதேசம் தவித்துக் கொண்டிருப்பது தொடர்பாக கருத்தினை தெரிவித்துள்ளார் கருத்தினிலே இந்த போதையில் இருந்து நமது எதிர்கால சந்ததியை மீட்டெடுப்பதற்கு நாங்கள் நீண்ட காலம் போராடிக் கொண்டிருந்தாலும் 2018 ஆம் ஆண்டு மிக விழிப்புணர்வோடு எதிர்ப்பு பிரச்சாரங்களை செய்து கொண்டு வந்திருக்கின்றோம் அன்றைய நிலையில் இதனை ஏற்றுக் கொள்வதற்கு நமது சமூக மறுத்து இருந்தாலும் இன்று மன மகிழ்ச்சியை தரும் விடயம் என்றால் போதையால் நமது சமூகம் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நமது சமூகத்தில் உள்ள அனைவரும் புரிந்து கொண்டிருப்பது அது பற்றிய விழிப்புணர்வோடு மனதாலும் வாயினாலும் உச்சரித்துக் கொண்டிருக்கும் நிலையும் நமது இளைஞர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தினையும் எல்லோரும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிக மகிழ்ச்சியான விடயம் இந்த போதை பாதையை மாற்றி எமது இளைஞர்களை பாதுகாப்பதற்கு நாம் எதிர்காலத்திமிகப்பெரிய விடயமாக ஒவ்வொரு பாடசாலையிலும் வடகிழக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளிலுமே எமது இளைஞர்களை பாதுகாப்பதற்காக பாடசாலை கல்வி ஊடாக இணைபாட விதான செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் உண்மையில் வடகிழக்கு தேசத்திலே நாங்கள் இப்படியான ஒன்றை செய்வதற்கு யாரும் எதிர்க்கப் போவதில்லை எனவே அனைவரும் ஒன்று கூடி பாடசாலை ஊடாக இணைபாட விதான செயற்பாடுகளை அதிகரித்து விளையாட்டுகளை கலை பண்பாடுகளை வளர்ப்பதற்கும் அதனூடாக இந்த தீய பழக்கத்தை எண்ணக்கூடாத அளவுக்கு அவர்களை மனமாற்றம் செய்வதற்கு முடியும் என்பதையும் நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன் மேலும் இந்த இளைஞர்களை இந்த யுவதிகளை இன்று யுவதிகள் கூட போதை குளிகைகளை பாவிக்கும் அளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது எனவே இந்த இளைஞர்கள் யுவதிகளை இந்த விபத்துகளிலிருந்து மீட்டெடுப்பதற்கு நீண்ட காலத்திற்கான ஒரு திட்டத்தை வகுத்து எமது சமூகத்தில் உள்ள அனைவரும் அனைத்து நிறுவனங்களும் ஆர்வலர்களும் இதில் ஒன்று கூடி தொடர்ச்சியான இளைஞர்களின் எதிரகாலத்தில் மிகப்பெரிய ஒரு நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்குமான செயற்பாட்டை செய்ய வேண்டும் அதிலே தியானம் பாடசாலை விளையாட்டு கலை நிகழ்வுகள் என்று பாடசாலை கல்வியினூடாக செயல்படுத்துவதோடு நமது கிராமங்கள் தோறும் கிராமிய விளையாட்டு கழகங்கள் சில சமூக நிலையங்கள் கலை மன்றங்கள் என்பவற்றை மீண்டும் புத்துருவாக்கி அதன் ஊடாக நமது இளைஞர் யுவதிகளை மீட்டெடுக்க ஆவன செய்ய வேண்டும் என்று நாம் அனைதவரும் எமது சந்ததியை மீட்டு வேண்டும் என்று் கேட்டுக்கொண்டார்.
Www.Likedtamil.lk