பனை மரம் முறிந்து விழுந்ததில் யாழில் வீடொன்று சேதம்!
பனை மரம் முறிந்து விழுந்ததில் யாழில் வீடொன்று சேதம்!
அதிக காற்று காரணமாக யாழில் சில தினங்களுக்கு முன்னர் பனை மரம் முறிந்து விழுந்ததில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்தது.
ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 60 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடே இவ்வாறு சேதமடைந்தது.
இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன் அந்த வீட்டைச் சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.