வெளிநாடொன்றிற்கு மீண்டும் கண் கருவிழிகளை தானம் செய்யும் இலங்கை!
வெளிநாடொன்றிற்கு மீண்டும் கண் கருவிழிகளை தானம் செய்யும் இலங்கை!
பாகிஸ்தா னுக்கு கண் கருவிழிகளை தானம் செய்வதை இலங்கை மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண் கருவிழிகளை தானம் நிறுத்தப்பட்டு இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், நேற்று முன் இரவு (19-06-2024) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் லாகூருக்கு அனுப்பப்பட்ட 5 வெண்படலங்களின் அண்மைய நன்கொடை பாகிஸ்தான் இராணுவ மருத்துவப் பணியாளர்கள் குழுவினால் ராவல்பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காகப் பெறப்பட்டது என்று இலங்கை உயர்ஸ்தானிகர் அட்மிரல் தெரிவித்துள்ளார்.
இலங்கை உலகிற்கு 88,000 க்கும் அதிகமான கண் கருவிழிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது மற்றும் அவற்றில் 36,000 க்கும் அதிகமானவற்றை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையை பாகிஸ்தான் – இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவர் இட்ரிஸ் அத்மானி ஒருங்கிணைத்தார்.