74 வயதை எட்டியிருக்கும் நரேந்திர மோடி மூன்றாவது தடவையாகவும் இந்திய பிரதமராகிறார்.!
74 வயதை எட்டியிருக்கும் நரேந்திர மோடி மூன்றாவது தடவையாகவும் இந்திய பிரதமராகிறார்.!
நடந்து முடிந்த இந்திய லோக்சபா தேர்தலில் BJP கூட்டணியான NDA 293 ஆசனங்களை பெற்றதன் மூலம் மீண்டும் ஆட்சியமைக்கும் தகுதியை மோடி பெறுகிறார்.
இதேவேளை மோடியை எதிர்த்து போட்டியிட்ட ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி INDIA 234 ஆசனங்களை பெற்றுள்ளது.
கடந்த தேர்தல்களை விடவும் ராகுல் காந்தியின் காங்கிரஸ் அணி கணிசமாகவே முன்னேறியுள்ளது. இதன் மூலம் பலம்வாய்ந்த எதிரணியாக திகழப்போகிறது.
இதற்கு முன்னர் 15 வருடங்கள் இந்திரா காந்தியும், 16 வருடங்கள் ஜவஹர்லால் நேருவும் நீண்ட காலம் ஆட்சி செய்த நிலையில் அதற்கடுத்ததாக நரேந்திர மோடி இடம்பிடிக்கிறார்.
ஏற்கனவே 10 வருடங்களை பூர்த்தி செய்துள்ள மோடிக்கு இன்னும் 5 வருடங்கள் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
அந்த ஐந்து வருடங்களும் என்னென்ன மாற்றங்களை ஏற்படும், எது நடக்கும் எது நடவாது போகும், யார் ஆள்வார் யார் கவிழ்வார் என்பதெல்லாம் இறைவன் கைவசம் உள்ள காரியங்களாகும்.
ஆட்சியை கொடுத்து, ஆட்சியை எடுத்து சோதிப்பதும், கண்ணியப்படுத்துவம் இறைவனின் அதிகாரத்தில் உள்ள காரியங்களாகும் எனும் உறுதியுடன் “எல்லாம் நன்மைக்கே” என்று எதிர்பார்ப்போம்!