நாட்டின் சில பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது‼️

நாட்டின் சில பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது‼️
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சூரியனின் வடக்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கத்தில், அது இந்த ஆண்டு ஏப்ரல் 05 முதல் 15 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேராக இருக்கும்.
இன்று (07) கடவத்தை, பதுளை, லுனுகல, கொங்கஸ்பிட்டிய, பக்மிட்டியாவ மற்றும் கொத்மலை ஆகிய இடங்களில் நண்பகல் 12:12 மணியளவில் சூரியன் மேல்நோக்கி நிற்கும் இலங்கையின் அண்மைய பகுதிகளாகும்.