கனடாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆறு இலங்கையர் பலி!
![கனடாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆறு இலங்கையர் பலி!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/03/Screenshot_20240308_074003.jpg)
கனடாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆறு இலங்கையர் பலி!
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 குழந்தை உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் வடக்கே ஒன்டாரியோ நகரில் திடீரென குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த 06 பேரும் இலங்கையர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 4குழந்தை உட்பட 6 ஆறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் படுகாயமடைந்த ஒருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றத்தை செய்தவர்கள் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மேலும், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த மரணங்கள் உள்நாட்டு அல்லது நெருக்கமான வன்முறையின் விளைவாக இருக்கலாம் என ஒட்டாவா பொலிஸார் கூறியுள்ளனர்.