தைப்பொங்கல் இன்று சர்க்கரைப்பொங்கல் செய்துவது எப்படி!
தைப்பொங்கல் இன்று சர்க்கரைப்பொங்கல் செய்துவது எப்படி!
தேவையான பொருட்கள்:
300 கிராம் சிவப்பு பச்சையரிசி
250 கிராம் சர்க்கரை
50 கிராம் வறுத்தபயறு
10 ஏலக்காய் / 1 தே.க ஏலக்காய்தூள் (-/+)
30 கிராம் கயூ (-/+)
20 கிராம் உலர்ந்த திராட்சை / பிளம்ஸ் (-/+)
3 ரைஸ் குக்கர் கப் தேங்காய் பால் (-/+)
50 மி.லீ நெய் (-/+)
10 பேரீச்சம்பழம் (-)
7 ரைஸ் குக்கர் கப் தண்ணீர்
உப்பு (-)
செய்முறை:
அடுப்பில் சட்டியில் சிறிது நெய் விட்டு, நெய் உருகியதும் கயூ மற்றும் பிளம்ஸ்சை வறுத்து எடுக்கவும்.
கழுவிய அரிசி மற்றும் பயரை ரைஸ் குக்கர் சட்டியில் போட்டு, 5 ரைஸ் குக்கர் கப் தண்ணீர் மற்றும் 1 ரைஸ் குக்கர் கப் தேங்காய்ப்பால் விட்டு, கலந்து அவிய விடவும்.
25 நிமிடங்களில் பின்பு அல்லது அரிசி முக்கால் பதம் அவிந்த பின்பு, 2 ரைஸ் குக்கர் கப் தேங்காய்ப்பால், 2 ரைஸ் குக்கர் கப் தண்ணீர், கயூ, பிளம்ஸ், ஏலக்காய் மற்றும் சர்க்கரையைப் போட்டுக் கலந்து, விரும்பினால் பேரீச்சம்பழத்துண்டுகள் தூவி அவிய விடவும்.
பொங்கல் இறுகி, ரைஸ் குக்கர் நின்றதும், மீதி நெய்யை விட்டுக் கிண்டவும்.
சுவையான சர்க்கரைப்பொங்கல் தயார்!!!
குறிப்பு:
ரைஸ் குக்கரில் பொங்கல் செய்ய 45 நிமிடங்கள் எடுத்தது.
1 பங்கு அரிசி மற்றும் பயறு என்றால், அண்ணளவாக 5 பங்கு தண்ணீர் மற்றும் பால் கலவை பொங்கலுக்கு தேவைப்படும். அரிசியின் தன்மைக்கேற்ப தண்ணீர் மற்றும் பாலின் அளவு மாறுபடும். மேலதிகமாக தேவைப்பட்டால் சர்க்கரை போடும் போது விடவும்.
சர்க்கரையை உருக்கி விடுவதென்றால், அதையும் அளந்து விட வேண்டும்.
தேங்காய்ப்பாலுக்கு பதிலாக பசும்பால் உபயோகிக்கலாம்.
உங்கள் சுவைக்கேற்ப பொருட்களின் அளவை கூட்டிக் குறைக்கவும்.
விரும்பினால் ஒரு சிட்டிகை உப்பை அரிசியுடன் சேர்த்து அவிய விடவும் (கோவிலில் பொங்கல் பொங்கும் போதும் மற்றும் வீட்டில் படைப்பதற்கு பொங்கும் போதும் உப்பு சேர்க்கக் கூடாது).