கொழும்பில் மதில் சுவர் இடிந்து வீழ்ந்து மாணவி உயிரிழப்பு!
கொழும்பில் மதில் சுவர் இடிந்து வீழ்ந்து மாணவி உயிரிழப்பு!
கொழும்பு வெல்லம்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மதில் சுவர் இடிந்து வீழ்ந்து காயமடைந்த 6 பேரில் மாணவி ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் ஆறு வயதுடைய சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் 5 மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்த்தாங்கியை பொருத்துவதற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
குறித்த பாடசாலையின் முதலாம் தரத்தில் பயிலும் மாணவர்களே இதன்போது காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மேலும் ஒரு மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.